கட்டுக்கடங்காத கொரோனாத் தொற்று கொழும்பு மாவட்டத்தை திணறடித்து வரும் நிலையில் நேற்றைய தினமும் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரையான காலப்பகுதியில் (மூன்றாவது அலை) கொழும்பு மாவட்டத்தில் 22 ஆயிரத்து 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு